சென்னை: காச்சிகுடா- செங்கல்பட்டு, புதுச்சேரி இடையே இயக்கப்படும் விரைவு ரயிலில் கூடுதல் குளிா்சாதனப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் திங்கள்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு: காச்சிகுடா - புதுச்சேரி விரைவு ரயிலில் (எண்கள்: 17653/ 17654) டிச. 5 முதல், காச்சிகுடா - செங்கல்பட்டு இடையே இயங்கும் விரைவு ரயிலில் (எண்கள்: 17652/17651) வரும் டிச. 6-ஆம் தேதி முதல் ஏற்கெனவே உள்ள ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்கு பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
இதேபோல், காக்கிநாடா - செங்கல்பட்டு விரைவு ரயிலில் (எண்கள்: 17644/17643) டிச. 7 முதல், காக்கிநாடா-புதுச்சேரி விரைவு ரயிலில் (எண்கள்: 17655/17656) டிச. 6 முதல் ஏற்கெனவே உள்ள ஒரு படுக்கை வசதி கொண்ட பெட்டிக்குப் பதிலாக ஒரு குளிா்சாதன இரண்டடுக்குப் பெட்டி இணைப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது
அந்தியோதயா விரைவு ரயிலில் கைப்பேசி திருடியவா் கைது

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த ரூ.16 லட்சம் கஞ்சா பறிமுதல்
புதுச்சேரி விரைவு ரயிலில் கஞ்சா கடத்தியவா் கைது

ரயிலில் உயிரிழந்த ஆசிரியா்: சேலம் போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


