சென்னையிலிருந்து வார இறுதியில் வெளியூர் செல்ல திட்டமா? மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! டாடா குழுமத் தலைவராக சந்திரசேகரன் தொடர்வார்! முடிவை மாற்றிய நிர்வாகக் குழு!இன்று கல்வி, நாளை வேறாக இருக்கலாம்! மனநிலையை மாற்ற தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுரை!நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!

இரு நாள்களுக்குப் பின் கூண்டு திரும்பிய வண்டலூர் சிங்கம்!

சென்னை வண்டலூர் பூங்காவில் மாயமான சிங்கம் கூண்டு திரும்பியது தொடர்பாக....

சிங்கம் (கோப்புப் படம்)

Published On :

சென்னை வண்டலூர் பூங்காவில் சஃபாரி பகுதியிலிருந்து மாயமான ‘ஷெரியார்’ என்ற சிங்கம், இரு நாள்களுக்குப் பிறகு இன்று(அக். 6) மீண்டும் கூண்டு திரும்பியுள்ளது.

சென்னை வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் மொத்தம் 9 சிங்கங்கள் உள்ளன. இதில், 3 ஆண் மற்றும் 4 பெண் என மொத்தம் 7 சிங்கங்கள் ‘லயன் சஃபாரியில்’ பராமரிக்கப்படுகின்றன.

இதனிடையே, கடந்த 2023-ஆம் ஆண்டு பெங்களூரு பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவுடன் விலங்கு பரிமாற்ற திட்டத்தின் மூலம் ‘ஷெரியார்’ என்ற 5 வயது ஆண் சிங்கம் வண்டலூர் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சிங்கம் சஃபாரி பகுதிக்குள் தொடர்ந்துவிடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அந்தச் சிங்கம் கடந்த அக்.3-ஆம் இரவு அதன் தங்குமிடத்துக்கு திரும்பவில்லை.

இதனால், ஷெரியாரை தேடும் பணியில் பூங்கா நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வந்த நிலையில், மீட்புக் குழுக்கள் வனப்பகுதிக்குள் சிங்கம் இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். மேலும், சஃபாரி பகுத்திக்குள்தான் சிங்கம் இருப்பதை உறுதிப்படுத்தினர்.

இந்த நிலையில், இரு நாள்களாக உணவு எடுக்க வராமல், சஃபாரி பகுதியில் மறைவாக இருந்த சிங்கம், இன்று மீண்டும் கூண்டு திரும்பியதாக பூங்கா ஊழியர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Summary

A lion named 'Sheriyar', who disappeared from the safari area at Chennai's Vandalur Park, has returned to its cage today (Oct. 6) after two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.