கரூரில் உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்களிடம் சிறப்பு புலனாய்வுக்குழுவினர் புதன்கிழமை தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கரூரில் கடந்த 27-ம்தேதி வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தில் 110 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் தற்போது குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் 27-ம்தேதி இரவு நெரிசல் சம்பவம் நடைபெற்றபோது, விஜய்யின் பிரசாரம் மற்றும் நெரிசல் ஏற்பட்டு மூச்சுத்திணறலால் பலர் உயிரிழந்ததையும், உயிருக்கு போராடி ஆம்புலன்ஸ்களில் அவர்களை அனுப்பி வைத்ததûயும் விடியோவில் பதிவு செய்து உள்ளூர் தொலைக்காட்சிகளைச் சேர்ந்த செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பினர்.
இந்த நிலையில் இந்தக் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஐ.ஜி.அஸ்ரா கர்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழுவினர் கடந்த 4 நாட்களாக கரூரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே செவ்வாய்க்கிழமை உள்ளூர் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் தொலைக்காட்சியின் உரிமையாளர்கள் ஆகியோருக்கு சம்பவம் தொடர்பாக விசாரிக்கும் வகையில், சிறப்பு புலனாய்வுக்குழுவினர் சார்பில் சம்மன்(அழைப்புக்கடிதம்) அனுப்பப்பட்டது.
இதையடுத்து புதன்கிழமை காலை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் அருகே உள்ள பயணியர் மாளிகையில் தங்கியிருக்கும் (எஸ்ஐடி) சிறப்பு புலனாய்வுக்குழுவினரிடம் உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள், செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஆகியோர் ஆஜராகினர்.
அவர்களிடம் சம்பவம் நடைபெற்றபோது எடுத்த விடியோக்கள் எங்களுக்கு நாளை(அக்.9-ம்தேதிக்குள்) வழங்கவேண்டும் என்றும், அந்த விடியோக்கள் மூலம் பல உண்மைகளை கண்டறிய முடியும் எனக்கூறி அவர்களை சிறப்பு புலனாய்வுக்குழுவினர் அனுப்பி வைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுவன் கொலைச் சம்பவம்: குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை

கரூர் சம்பவம்: கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் சிபிஐ விசாரணை!

கரூர் பலி! பசுபதிபாளையம் காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளரிடம் சிபிஐ விசாரணை

கரூர் நெரிசல் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
விடியோக்கள்

மாநிலக் கட்சிகளை முறையாக ஒருங்கிணைக்கிறதா காங்கிரஸ்?: ப. சிதம்பரம் Exclusive | P Chidambaram |

தீர்மானத்திற்கு கர்நாடக அரசு பணியாது! முன்னாள் அமைச்சர் துரைமுருகன் | DMK | TVK



