டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

4 ஆண்டுகளாக ஆளுநருடன் தமிழக அரசு போராடிக் கொண்டிருக்கிறது: உதயநிதி

திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு..

News image
உதயநிதி ஸ்டாலின் - X
Updated On :8 அக்டோபர் 2025, 10:16 am

இணையதளச் செய்திப் பிரிவு

ஆளுநருடன் தமிழக அரசு 4 ஆண்டுகளாகப் போராடிக் கொண்டிருக்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது நிகழ்வில் பேசிய அவர்,

"தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்ளனர். மேலும் ஒருவர், இரு நாள்களுக்கு முன்னர் தனது பிரசாரத்தைத் தொடங்கியுள்ளார். அவர் ஆளுநர் ஆர்.என். ரவி.

'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்று நாம் சொன்னால் 'நீங்கள் யாருடன் போராடப் போகிறீர்கள்? யாரை வெல்லப் போகிறீர்கள்?' என்று ஆளுநர் கேட்கிறார்.

4 ஆண்டுகளாக தமிழக அரசு உங்களுடன்(ஆளுநர் ஆர்.என். ரவி)தான் போராடிக் கொண்டிருக்கிறது. நிச்சயம் தமிழ்நாடு உங்களுடன் போராடும், வென்று காட்டும்.

சட்டப்பேரவையில் இருந்து அனுப்பப்படும் ஒவ்வொரு கோப்புகளிலும் சட்டபூர்வமாக ஆளுநரின் கையெழுத்து பெற்று வருகிறார் முதல்வர்.

எடப்பாடி பழனிசாமி மாதிரி முதல்வரும் அடிமையாக இருப்பார் என்று ஆளுநர் நினைத்துக் கொண்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் திமுக இருக்கும்வரை அநீதிக்கு எதிராக போராடிக் கொண்டிருக்கும். பாசிச சக்திகளை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" என்று பேசியுள்ளார்.

இதுபற்றி உதயநிதி தனது எக்ஸ் பக்கத்தில்,

முதல்வரின் அறிவுறுத்தலின்படி, தீரர் கோட்டமாம் திருச்சியில் திருவரங்கம் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த கழக நிர்வாகிகளுடன் இன்று கலந்துரையாடினோம்.

எத்தனை சூழ்ச்சிகள் வந்தாலும், 2026 தேர்தலில் மீண்டும் உதயசூரியன் உதிப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று உரையாற்றினோம்.

தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்!!" என்று பதிவிட்டுள்ளார்.

summary

TN govt has fighting with the Governor for 4 years: Udhayanidhi stalin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.