
சிறப்புப் புலனாய்வு குழுவின் உண்மையான விசாரணைக்கு பின்பு தான் கரூரில் என்ன நடந்தது என்பது தெரிய வரும் என தமிழக வெற்றிக் கழகக் கொள்கை பரப்புச் செயலாளரும், ஓய்வு பெற்ற ஐஆர்எஸ் அதிகாரியமான அருண்ராஜ் தெரிவித்தார்.
தவெக கொள்கை பரப்புச் செயலாளர் அருண்ராஜ் புதன்கிழமை காலை தனியார் ஹோட்டல் ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற எங்களை அனுப்பி உள்ளார். அதன் பேரில் பாதிக்கப்பட்டவர்களைக் கடந்த இரண்டு நாள்களாக 33 பேரை சந்தித்து விஜய்யை விடியோ கான்பரன்ஸ்ங்கில் மக்களிடம் பேச வைத்தோம்.
அப்போது அவர்கள் விஜய்யிடம், நெரிசல் சம்பவத்தில் உங்களிடம் எந்த தவறும் கிடையாது, நீங்கள் தைரியமாக இருங்கள் என்றனர். மேலும் விஜய் கரூர் வந்து விரைவில் உங்களை சந்திப்பேன் என்று பாதிக்கப்பட்டவரிடம் தெரிவித்தார்.
இதனால், விஜய்யை கரூர் வந்து பாதிக்கப்பட்டவர்களை பார்க்கும் வகையில் அவருக்கு உரிய பாதுகாப்பு கேட்டு சென்னை டிஜிபி அலுவலகத்தில் நேற்று மின்னஞ்சல் மூலம் மனு அளித்தோம்.
இன்று எங்களது கட்சி நிர்வாகிகள் டிஜிபியை நேரில் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்க உள்ளனர். தற்போது விசாரணை குழு இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறது. இந்த விசாரணைக்குப் பின் இங்கு என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரிய வரும்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.