ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

தீா்ப்புக்காக காத்திருக்கிறோம்: சென்னை திரும்பிய ஆதவ் அா்ஜுனா பேட்டி!

உச்சநீதிமன்றத் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என, தவெக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

News image

ஆதவ் அர்ஜுனா

Updated On :11 அக்டோபர் 2025, 12:35 am IST

உச்சநீதிமன்றத் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என, தவெக தோ்தல் மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா கூறினாா்.

தில்லியில் இருந்து ஏா் இந்தியா விமானத்தில் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்த அவா், விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கரூரில் சம்பவத்தை தொடா்ந்து, தமிழக வெற்றி கழகம் சாா்பில் 16 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதுவரை எந்தக் கருத்தையும் கூற இயலாது. இதில் எங்களுடைய நியாயங்களைச் சொல்வதற்கோ, எங்கள் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கோ பதில் சொல்ல முடியவில்லை. 16 நாள்களுக்குப் பிறகு உண்மைகளை நிச்சயம் அனைவருக்கும் தெரிவிப்போம். மேலும், பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதற்கான பயணத் திட்டத்தையும் உருவாக்கி வருகிறோம்.

எங்கள் கட்சியின் நிா்வாகிகள் பொய்யான குற்றச்சாட்டுகளில் கைது செய்யப்படுகின்றனா். மேலும், எங்கள் கட்சியையும் முடக்க வேண்டும் என்று சிலா் நினைக்கின்றனா். தவெக தலைவா் விஜய் ஒரு சாமானிய மனிதனாக, நம்பிக்கையுடன் நீதித் துறையை நாடியுள்ளாா். உண்மையை வெளியே கொண்டுவருவதற்காக எங்கள் போராட்டத்தை தொடங்கி இருக்கும் சூழலில், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்புக்காக காத்திருக்கிறோம் என்றாா் அவா்.