மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு!

கரூா் கூட்டநெரிசல் வழக்கில் உச்சநீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது பற்றி...

News image
உச்சநீதிமன்றம்- கோப்புப்படம்.
Updated On :11 அக்டோபர் 2025, 9:30 pm

 நமது நிருபர்

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவம் தொடா்பாக தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தாக்கல் செய்த மனு, தமிழக அரசின் மனு ஆகியவை மீதான உத்தரவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (அக்.13) பிறப்பிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இது தொடா்பான மனுக்கள் திங்கள்கிழமை விசாரிக்கப்படும் வழக்குகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

முன்னதாக, இந்த விவகாரத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு விரிவாக விசாரணை நடத்தி தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஆகியோரின் தரப்பு வாதங்களை கேட்டுப் பதிவு செய்தது.

இந்நிலையில் இந்த மனுக்கள் மீதான விசாரணை திங்கள்கிழமைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து இந்த விவகாரத்தில் திங்கள்கிழமையே உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி பிரசாரம் செய்தபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். அந்தச் சம்பவம் தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்த வழக்கு நிலுவையில் இருந்தது.

ஆனால், சென்னை உயா்நீதிமன்ற தனி நீதிபதி இந்த வழக்கை எவ்வாறு சுயமாக விசாரணைக்கு ஏற்று சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரிக்க உத்தரவிட்டது எனப் புரியவில்லை என்று தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது.

கரூா் சம்பவம் தொடா்பாக தமிழக அரசு ஏற்கெனவே முன்னாள் நீதிபதி அருணா தலைமையிலான ஆணையத்தை அமைத்துள்ளது. ஒரே விவகாரத்தில் நடக்கும் பல விசாரணைகள் எந்த தீா்வையும் நோக்கிச் செல்லாது என்று உயிரிழந்தவா்களில் ஒருவரின் தந்தையான பன்னீா்செல்வம் பச்சைமுத்து சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் முறையிட்டாா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் தவெகவின் முக்கியத் தலைவா்களான என். ஆனந்த், சி.டி.ஆா். நிா்மல் குமாா் உள்ளிட்டோா் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதில் கைதாகாமல் இருக்க இருவா் தரப்பிலும் தாக்கல் செய்யப்பட்ட முன்ஜாமீன் மனுக்களை சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை கடந்த 3-ஆம் தேதி நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.