திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

விரைவில் 2,200 பேராசிரியர்கள் நியமனம்: அமைச்சர் கோவி. செழியன்

ஒரு மாதத்திற்குள் டிஆர்பி மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :12 அக்டோபர் 2025, 1:42 pm IST

ஒரு மாதத்திற்குள் டிஆர்பி மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை நியமனம் செய்ய தேர்வு நடத்தப்படும் என உயர்கல்வித் துறை கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பள்ளி மாணவிகளுக்கு இடையே தஞ்சையில் நடந்த கால்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பரிசுகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், முதல்வரின் சிறப்பான ஆட்சியால் தமிழ்நாடு உலக அளவில் சிறந்து விளங்குகிறது.

தமிழ் நாட்டில் கல்வி, சுகாதாரம், தொழில்துறை எப்படி முதன்மையானதாக விளங்குகிறதோ அதேபோல் விளையாட்டுத் துறையும் முதன்மையாக திகழ்கிறது.

விளையாட்டுத்துறையில் இந்திய அளவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. துணை முதுல்வர் வசம் விளையாட்டுத் துறை உள்ளதால் அவர் படிப்போடு விளையாட்டில் அனைத்து மாணவ- மாணவிகளும் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.

கிராம மக்கள், அடிதட்டு மக்களும் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குகின்றனர் என்றால் அவரது சீரிய முயற்சி காரணமாகும்.

கோவை மேம்பாலத்திற்கு தலைசிறந்த விஞ்ஞானியான ஜி.டி. நாயுடு பெயரை சூட்டி முதல்வர் சிறப்பு செய்தார். ஆனால் எதிர்க்கட்சிகள் இதனை பெருமைப்படுத்தாமல் கொச்சைப் படுத்துகின்றனர். ஒரு சிலரை ஜாதி பெயரை கூறினால் தான் அடையாளம் தெரியும். அதனால் மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு பெயர்தான் பொருத்தமாக இருக்கும்.

தமிழகத்தில் 34 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டன. நான் பொறுப்பேற்ற 8 மாதத்திற்குள் 16 புதிய கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 8 புதிய பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்கு தேவையான 2,700 நிரந்தர பேராசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர இன்னும் ஒரு மாதத்திற்குள் டிஆர்பி தேர்வு மூலம் 2,200 நிரந்தர பேராசிரியர்களை எடுப்போம். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

Summary

Higher Education Minister Govi Chezhiaan has said that an examination will be conducted to appoint 2,200 permanent professors through the TRB examination within a month.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.