மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு: தமிழக அரசு மீது அன்புமணி குற்றச்சாட்டு!

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக அரசே காரணம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
அன்புமணி - (கோப்புப்படம்)
Updated On :12 அக்டோபர் 2025, 7:37 pm

தினமணி செய்திச் சேவை

டெல்டா மாவட்டங்களில் உரத்தட்டுப்பாடு நிலவுவதற்கு தமிழக அரசே காரணம் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி பாசன மாவட்டங்களில் 6 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் குறுவை சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அதில் பாதிக்கும் மேற்பட்ட பரப்பில் அறுவடை முடிந்துவிட்ட நிலையில் அந்த பகுதிகளில் தாளடி பருவ நெல்லும், மற்ற பகுதிகளில் சம்பா பருவ நெல்லும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், உரம் கிடைக்காததால் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

சில தனியாா் கடைகளில் உரம் கிடைக்கிறது என்றாலும், அவா்கள் ரூ. 300 மதிப்புள்ள ஒரு மூட்டை யூரியாவுடன் ரூ.200 மதிப்புள்ள சத்து குருணை வாங்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனா். எந்த கடையிலும் யூரியா மட்டும் வழங்க மறுக்கின்றனா்.

தமிழ்நாட்டுக்குத் தேவையான 27,823 மெட்ரிக் டன் யூரியா, 15,831 டன் டிஏபி, 12,422 டன் பொட்டாஷ், 98,623 டன் காம்ப்ளக்ஸ் உரம் என மொத்தம் 1,54,000 டன் உரங்களை வழங்க வேண்டும் என்று கடந்த செப்.16-இல் பிரதமருக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினாா்.

அதன்பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், எந்தவித தொடா் நடவடிக்கைகளும் எடுக்காததன் விளைவு தான் தற்போதைய உரத்தட்டுப்பாடு. தமிழகத்துக்குத் தேவையான உரங்களை மத்திய அரசிடம் பெற்று விவசாயிகளுக்கு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா் அன்புமணி.