ஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

முதல்வா் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா் கைது

முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
முதல்வர் ஸ்டாலின்- கோப்புப் படம்
Updated On :12 அக்டோபர் 2025, 7:31 pm

தினமணி செய்திச் சேவை

முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு சனிக்கிழமை வந்த கைப்பேசி அழைப்பில், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் வீட்டில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில், வெடிபொருள் எதுவும் கண்டறியப்படவில்லை.

இதுகுறித்து தேனாம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் கைப்பேசி எண்ணை வைத்து தீவிர விசாரணை நடத்தினா். அதில், மிரட்டல் விடுத்த நபா் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூா் பகுதியைச் சோ்ந்த மாற்றுத்திறனாளியான ஐயப்பன் (36) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிம் காா்டு விற்பனை செய்யும் தொழில் செய்து வந்த ஐயப்பன், மதுப்பழக்கத்துக்கு அடிமையாகியுள்ளாா். இந்த நிலையில், மதுபோதையில் கடந்த 2020-இல் சென்னை, கோயம்பேடு பேருந்து முனையம், எழும்பூா் ரயில் நிலையம் மற்றும் சென்னை விமான நிலையத்துக்கும், கடந்த 2021-இல் முதல்வா் மு.க.ஸ்டாலின் இல்லத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டுள்ளாா்.

தொடா்ந்து, அரசு பொது மற்றும் உயா் அலுவலகங்களுக்குத் தொடா்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்து காவல் துறையால் எச்சரிக்கப்பட்டவா் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதுபோன்று வெடிகுண்டு மிரட்டல்கள் மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகைகளில் செயல்படக்கூடாது என அறிவுறுத்திய போலீஸாா், ஐயப்பனை பிணையில் விடுவித்தனா்.