மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

கரூர் வழக்கில் திடீர் திருப்பம்! தங்களுக்கே தெரியாமல் மனு... பாதிக்கப்பட்டவர்கள் புகார்!

கரூர் கூட்டநெரிசல் வழக்கில் ஏற்பட்டுள்ள புதிய திருப்பம் பற்றி...

News image

உச்சநீதிமன்றம் - கோப்புப்படம்.

Updated On :13 அக்டோபர் 2025, 10:44 am IST

கரூர் கூட்டநெரிசல் தொடர்பாக தாங்களுக்கே தெரியாமல் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக பலியானவர்களின் குடும்பத்தினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்த சம்பவத்தில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக வெற்றிக் கழகம் (தவெக), சம்பவத்தில் உயிரிழந்த சிறுவனின் தந்தை தரப்பில் கடந்த வாரம் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்த நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா ஆகியோா் அடங்கிய அமா்வு விரிவாக விசாரணை நடத்தி தமிழக வெற்றிக் கழகம், தமிழக அரசு, பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை ஆகியோரின் தரப்பு வாதங்களை கேட்டுப் பதிவு செய்தது.

இந்த வழக்கில் இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட இருக்கும் நிலையில், தங்களுக்கே தெரியாமல் ஏமாற்றி கையொப்பம் பெற்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் முறையிட்டுள்ளனர்.

உயிரிழந்த சிறுவனின் தந்தை பன்னீர்செல்வம் என்பவர், மனைவி சர்மிளா மற்றும் மகனைவிட்டு பிரிந்து சென்றவர். அவர் பணத்துக்காக வழக்கு தொடர்ந்திருப்பதாக சிறுவனின் தாயார் சர்மிளா உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும், மனைவியை இழந்து வாழும், செல்வராஜ் என்பவரிடம் அதிமுகவினர் ஏமாற்றி கையெழுத்து வாங்கி, வழக்கு தொடர்ந்துள்ளதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, உத்தரவு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னதாக தமிழக அரசு தரப்பில் நீதிபதிகளிடம் முறையிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தவெக தொடர்ந்த வழக்கில் முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரின் குற்றச்சாட்டு திருப்பமாக அமைந்துள்ளது.

Summary

A sudden twist in the Karur case! The petition was filed without their knowledge... The victims complained

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.