காலாண்டுத் தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்த பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த கல்வித் துறை ஆலோசித்து வருகிறது.
இதற்காக அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் தேர்வுகளில் குறைந்த மதிப்பெண் எடுத்த மாணவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வித் துறை ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. பள்ளி நேரம் முடிந்த பின்னர் மாலை வேளை மற்றும் வார இறுதி நாள்களில் சிறப்பு வகுப்புகளை நடத்த பரிசீலனை செய்து வருவதாகவும் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.