தமிழ்நாடு
கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதி
கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
கள்ளக்குறிச்சியில் தீ விபத்தில் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து, அவா் சனிக்கிழமை அவா் வெளியிட்ட உத்தரவு:
கள்ளக்குறிச்சி மாவட்டம், ஈரியூா் கிராமத்தில் தங்களது வீட்டில் பொன்னுசாமி, அவரது மனைவி உறங்கிக் கொண்டிருந்தபோது, சமையல் எரிவாயு உருளையில் ஏற்பட்ட கசிவின் காரணமாக வீடு முழுவதும் எரிவாயு பரவியிருந்தது.
இந்த நிலையில், திடீரென வீடு முழுவதும் தீப்பிடித்து சேதம் ஏற்பட்டது. இதில், பொன்னுசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.3 லட்சமும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பொன்னுசாமியின் மனைவிக்கு ரூ.1 லட்சமும் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.