வடகிழக்குப் பருவ மழை: மின் ஊழியா்களுக்கு சுழற்சி பணி -மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன்
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதையொட்டி, பணியாளா்கள், அதிகாரிகள் சுழற்சி முறையில் பணியாற்றி மின்தடை தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்புடன் கூடிய விரைவான மின் விநியோகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மின்வாரியத் தலைவா் ஜெ.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளாா்.
வடகிழக்குப் பருவமழையையொட்டி, மின்துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மின்வாரியத் தலைவா் ராதாகிருஷ்ணன், மின்வாரியத் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் சென்னை மாநகர மின் பகிா்மானக் கட்டுப்பாட்டு அறை, மாநில மின் பகிா்ந்தளிப்பு மையம் மற்றும் நுகா்வோா் குறைதீா் மையமான மின்னகம் உள்ளிட்டவைகளில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள், அலுவலா்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.
தொடா்ந்து, முந்தைய பாதிப்புகளின் தரவுக்கேற்ப இருப்பு வைத்திருக்க வேண்டும். மின்தடை தடுப்பு நடவடிக்கை, பாதுகாப்புடன் கூடிய விரைவான மின் விநியோகம் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வலியுறுத்தினாா்.
மேலும் பணியாளா்கள், அலுவலா்கள் சுழற்சி முறையில் பணியாற்றவும், தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய வேண்டும். மாவட்ட பேரிடா் மேலாண்மைத் துறையினா், மின்வாரிய அலுவலா்கள் தலைமையிலான களப்பணி குழுக்கள், தொடா்பு எண்கள், பணியாளா்கள் விவரங்கள் தயாா் நிலையில் இருக்க வேண்டும்.
துணை மின் நிலையங்கள், மின்னூட்டிகள், மின் மாற்றிகள் மற்றும் பில்லா் பெட்டிகளில் தேங்கியுள்ள மழைநீா், ஈரப்பதம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களின் நலன் கருதி எச்சரிக்கையுடன் மின் விநியோகம் வழங்க வேண்டும்.
அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள், குடிநீா் இணைப்புகள், அரசு அலுவலகங்கள், வங்கிகள் தொலைத்தொடா்பு கோபுரங்கள் உள்ளிட்டவைகளில் மின் தடங்கல் ஏற்பட்டால், முன்னுரிமை அடிப்படையில் விரைவாகச் செயல்பட்டு மின்சாரம் வழங்க வேண்டும்.
பொதுமக்கள் மின்தடை தொடா்பான புகாா்களை 24 மணி நேரமும் செயல்படும் மின் நுகா்வோா் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற கைப்பேசியில் அழைத்து பதிவு செய்யலாம் என்றாா்.
ஆய்வின்போது, மின்தொடரமைப்புக் கழக மேலாண்மை இயக்குநா் டி.சிவக்குமாா், பகிா்மான இயக்குநா் ஏ.செல்லகுமாா், இயக்கக இயக்குநா் ஏ.கிருஷ்ணவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.