திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 7.94 லட்சம் பேர் பயணம்!

கடந்த 3 நாள்களில் அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் சென்றோர் எண்ணிக்கை குறித்து...

News image

கோப்புப் படம்

Updated On :20 அக்டோபர் 2025, 8:21 am IST

தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் 7.94 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

அக். 16 முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 15,429 பேருந்துகளில் 7,94,990 பேர் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

தீபாவளியையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.

வார இறுதி நாள் மற்றும் திங்கள் கிழமை தீபாவளி மற்றும் தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.

கடந்த 4 நாள்களில் ரயில்கள், பேருந்துகள், கார்கள் மூலம் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் எனக் கூறப்படுகிறது.

இதனிடையே அக். 16 முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 15,429 அரசுப் பேருந்துகளில் மட்டும் 7,94,990 பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Summary

diwali festival 7.94 lakh people travel in government buses

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.