தீபாவளி பண்டிகையையொட்டி தமிழ்நாட்டில் 7.94 லட்சம் பேர் தங்கள் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
அக். 16 முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 15,429 பேருந்துகளில் 7,94,990 பேர் பயணம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
தீபாவளியையொட்டி சென்னை உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பயணிகள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
வார இறுதி நாள் மற்றும் திங்கள் கிழமை தீபாவளி மற்றும் தீபாவளிக்கு மறுநாளும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகரித்திருந்தது.
கடந்த 4 நாள்களில் ரயில்கள், பேருந்துகள், கார்கள் மூலம் 18 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்குச் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிகம் எனக் கூறப்படுகிறது.
இதனிடையே அக். 16 முதல் 19ஆம் தேதி வரை இயக்கப்பட்ட 15,429 அரசுப் பேருந்துகளில் மட்டும் 7,94,990 பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதையும் படிக்க | பட்டாசு வெடிப்போர் கவனம்... அடுத்த 3 மணிநேரத்துக்கு எங்கெல்லாம் மழை?
Summary
diwali festival 7.94 lakh people travel in government buses
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!

சொந்த ஊர்களுக்குச் சென்றவர்கள் சென்னை திரும்ப வசதியாக சிறப்பு ரயில், பேருந்து விவரங்கள்!

வாக்களிக்க சென்னையிலிருந்து 19.37 லட்சம் போ் சொந்த ஊா் பயணம்

சென்னையில் இருந்து 1,88,705 பேர் சிறப்புப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பயணம்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



