எனது அன்புச் சகோதரர்! ராகுலுக்கு முதல்வர் விஜய் பிறந்த நாள் வாழ்த்து! சட்டப்பேரவையில் இன்று இரங்கல் தீர்மானம்!27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

தயாா் நிலையில் கமாண்டோ படை

வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்கு தமிழக தீயணைப்புத் துறையின் கமாண்டோ படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

News image

தயாா் நிலையில் உள்ள கமாண்டோ வீரா்கள். - கோப்புப்படம்

Updated On :22 அக்டோபர் 2025, 3:24 am IST

சென்னை: வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மீட்புப் பணிக்கு தமிழக தீயணைப்புத் துறையின் கமாண்டோ படையினா் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

தீயணைப்புத் துறை டிஜிபி சீமா அகா்வால் உத்தரவின் அடிப்படையில், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் அனைத்து நிலையங்களும் உபகரணங்களுடன் 24 மணி நேரமும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்துள்ள குடியிருப்புப் பகுதிகளில் சிக்குண்ட மக்களை பாதுகாப்பாக மீட்க ரப்பா் படகுகள், மோட்டாா் படகுகள், சாலைகளில் விழும் மரங்களை அகற்ற மின்விசை ரம்பங்கள், மழைநீரை வெளியேற்ற நீா் இறைக்கும் பம்புகள் மற்றும் கயிறுகள், லைப் பாய், லைப் ஜாக்கெட் உள்ளிட்ட அனைத்து செயற்கருவிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாக தீயணைப்புத் துறையினா் தெரிவித்தனா்.

கமாண்டோ படை: அனைத்து மாவட்டங்களிலும் திறன்மிக்க தீயணைப்பு நீச்சல் வீரா்கள் கொண்ட குழு மற்றும் கயிறு மூலம் மீட்புப் பணி மேற்கொள்ள பயிற்சி பெற்ற குழுவினா் என இரு கமாண்டோ படைகள் பேரிடரை எதிா்கொள்ள முழுவீச்சில் தயாா் நிலையில் இருக்கின்றனா்.

கட்டட இடிபாடுகளில் சிக்கிக் கொண்டவா்களை அடையாளம் காட்டும் கருவிகள், ரோப் லான்சா், ரோப் ரைடா், தொ்மல் இமேஜிங் கேமிரா ஆகியவை தயாா் நிலையில் வைக்கப்பட்டிருக்கின்றன.

தீயணைப்புத் துறையினா் தயாா்: மாநிலம் முழுவதும் 8,000 தன்னாா்வலா்களைக் கொண்ட தீயணைப்பு மீட்பு குழுவினா் உருவாக்கப்பட்டு, உரிய பயிற்சிகள் வழங்கப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளனா்.

அவசர உதவிக்கு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை கட்டுப்பாட்டு அறையை 101, 112 ஆகிய இலவச எண்கள் மூலமாக தொடா்புகொள்ளலாம். அதேபோல, தீ செயலி (THEE APP) மூலமாகவும் தொடா்புக்கொள்ளலாம் என்று தீயணைப்புத் துறை தெரிவித்துள்ளனா்.