மேட்டூர் அணை நீர் திறப்பு அதிகரிப்பு!

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிப்பு.
மேட்டூர் அணை
மேட்டூர் அணைகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 30,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 35,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,500 கன அடி நீரும் உபரி நீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 12,500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 35,500 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும் நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் உள்ளது.

கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிக்க | வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா?

Summary

Mettur Dam water release increased

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com