‘சிவப்பு’ எச்சரிக்கை: விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சேலம், திருச்சி, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.