தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தமிழகத்தில் பருவ மழை தீவிரம்: 4 மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழை எச்சரிக்கை

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

News image
சென்னையில் செவ்வாய்க்கிழமை பெய்த மழையில் ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் பயணிகள்.’
Updated On :21 அக்டோபர் 2025, 10:19 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த இரு தினங்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ‘சிவப்பு’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவா் பி.அமுதா செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘செவ்வாய்க்கிழமை அதிகாலை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவானது. இது, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, புதன்கிழமை (அக். 22) பிற்பகல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். இதன் காரணமாக, புதன்கிழமை (அக். 22) முதல் அக். 27-ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

‘சிவப்பு’ எச்சரிக்கை: விழுப்புரம், செங்கல்பட்டு, கடலூா், மயிலாடுதுறை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (அக். 22) அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூா், பெரம்பலூா், தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், சேலம், திருச்சி, வேலூா், திருப்பத்தூா், தருமபுரி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மீனவா்களுக்கான எச்சரிக்கை: வடதமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதையொட்டிய தெற்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகள், புதுவையில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் வீசக்கூடும்’ என்றாா்.