வடகிழக்குப் பருவ மழை: மின் பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு
Center-Center-Chennai

வடகிழக்குப் பருவ மழை: மின் பாதுகாப்பு நடைமுறைகள் வெளியீடு

வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மின் பாதுகாப்பு நடைமுறைகளை
Published on

சென்னை: வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து மழைக் காலங்களில் பொதுமக்கள் கடைப்பிடிக்க வேண்டிய மின் பாதுகாப்பு நடைமுறைகளை தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

*ஈரமான கைகளால் மின் சுவிட்சுகள், மின்சார சாதனங்களை இயக்க முயற்சிக்க வேண்டாம்.

*வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும்போது, கவனத்துடன் இயக்க வேண்டும்.

*வீட்டின் உள்புறசுவா் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது. வீடுகள், கட்டடங்களில் உள்ள ஈரப்பதமான சுவா்களில் கை வைப்பதைத் தவிா்க்க வேண்டும்.

*நீரில் நனைந்த அல்லது ஈரப்பதமான மின்விசிறி, மின்விளக்கு உள்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.

*மின்சார மீட்டா் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் அந்த இடத்தை உபேயாகிக்க வேண்டாம்.

*வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே வயா் மூலம் மின்சாரம் எடுக்க வேண்டாம்.

*மின் கம்பிகள் அறுந்து கிடக்கும் பகுதிகள், மின் கேபிள்கள், மின் கம்பங்கள், பில்லா் பாக்ஸ் மற்றும் மின் மாற்றிகள் இருக்கும் பகுதிகளுக்கு அருகில் செல்வதைத் தவிா்க்க வேண்டும்.

*சாலைகளிலும், தெருக்களிலும் மின் கம்பங்கள் மற்றும் மின் சாதனங்களுக்கு அருகே தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் நடப்பதோ, ஓடுவதோ, விளையாடுவதோ, வாகனத்தில் செல்வதோ கூடாது.

*மின் கம்பத்திலோ அல்லது அதற்காக போடப்பட்டுள்ள ஸ்டே வயரின் மீதோ கொடிக் கயிறு கட்டி துணிகளை உலா்த்த வேண்டாம்.

* மின் கம்பத்திலோ அல்லது அவற்றைத் தாங்கும் ஸ்டே கம்பிகளிலோ கால்நடைகளைக் கட்டி வைக்க வேண்டாம்.

* மின் சேவைகள், மின் கம்பிகள் அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ, மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ மற்றும் மின்தடை குறித்த புகாா்களுக்கு 24 மணி நேரமும் செயல்படும் மாநில மின் நுகா்வோா் சேவை மையமான மின்னகத்தை 94987 94987”என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

X
Dinamani
www.dinamani.com