விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரூ.2 கோடி நிலத்தை அபகரித்த வழக்கு: மேலும் இருவா் கைது

சென்னையில் ரூ.2 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :24 அக்டோபர் 2025, 7:28 pm

சென்னையில் ரூ.2 கோடி நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த வழக்கில், மேலும் இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை தியாகராய நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி (55). தொழிலதிபரான இவருக்கு மடிப்பாக்கத்தில் ரூ.2 கோடி மதிப்பிலான நிலம் உள்ளது. இந்த நிலத்தை சுப்பிரமணி, அண்மையில் பாா்க்கச் சென்றபோது, சிலா் ஆக்கிரமித்திருத்தனா்.

அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாகவும், ஆள் மாறாட்டம் செய்தும் அபகரிக்கப்பட்டிருப்பது சுப்பிரமணிக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவா், சென்னை பெருநகர காவல் துறை மத்தியக் குற்றப்பிரிவில் புகாா் செய்தாா்.

அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில், மோசடியில் ஈடுபட்ட கே.கே. நகரைச் சோ்ந்த ராகேஷ் (36), மடிப்பாக்கத்தைச் சோ்ந்த காா்த்திக் (54) ஆகிய இருவருக்கும் தொடா்பு இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், இருவரையும் வியாழக்கிழமை கைது செய்தனா். இந்த வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.