தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தோ்தல் வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை: நயினாா் நாகேந்திரன்

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

News image
பாஜக தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன்
Updated On :26 அக்டோபர் 2025, 10:40 pm

தினமணி செய்திச் சேவை

தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பெரம்பலூா் மாவட்டத்தில் மருதையாற்றில் திருமானூா், தா.பழூா், கொள்ளிடம் குருவாடி, புளியங்கோம்பை அருகில் காட்டாறு, குண்டேரி ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என கடந்த பேரவைத் தோ்தலின்போது, திமுக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், தற்போது வரை அங்கு தடுப்பணைகள் கட்டப்படவில்லை. அதனால், பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்கள் வறட்சியில் உள்ளன.

திமுகவின் தோ்தல் வாக்குறுதிகளை நம்பி ஏமாற்றமடைந்து, விவசாயத்துக்கான தண்ணீா் கிடைக்காமல் தவிக்கும் நிலையில் விவசாயிகள் உள்ளனா்.

ஆனால், 99 % வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக திமுக கூறுவது ஏற்புடையதல்ல. வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுகவை, ஆட்சியிலிருந்து இறக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளாா்.