சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆரஞ்சு எச்சரிக்கையில் திருவள்ளூர்! தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழு

திருவள்ளூருக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில்

News image

பேரிடர் மீட்புக் குழு - கோப்புப்படம்

Updated On :27 அக்டோபர் 2025, 10:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: வங்கக் கடலில் உருவாகியிருக்கும் மோந்தா புயல் காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்துக்கு நாளை அதி கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பேரிடர் மீட்புக் குழு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

மோந்தா புயல் நாளை காலை அதிதீவிரப் புயலாக மாறி, மாலை அல்லது இரவில் ஆந்திர மாநிலத்தில் கரையைக் கடக்கவிருக்கிறது.

அதையொட்டி சென்னையில் நாளை தரைக் காற்றின் வேகம் சிறிது உயர வாய்ப்புள்ளது, அந்த நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை அதி கனமழை பெய்யலாம் என்பதால், வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்திருந்தது. இதையடுத்து, பேரிடர் மீட்பு படையினர் திருவள்ளூரில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

பேரிடர் மீட்புப் படை ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் 90 பேர் கொண்ட 3 குழுக்கள் தயார் நிலையில் உள்ளன. ஒரு குழு கொளத்தூர் பகுதியிலும், இரண்டு குழுக்கள் வெவ்வேறு இடங்களிலும் நிறுத்தப்பட்டுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.