

‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னையில் இன்றிரவிலிருந்து மழை படிப்படியாக அதிகரிக்கும் என்ற தகவலை தமிழ்நாட்டைச் சேர்ந்த வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜாண்(தமிழ்நாடு வெதர்மேன்) வெளியிட்டுள்ளார்.
அதன்படி, சென்னையில் இன்று(அக். 27) இரவிலிருந்து மழைப்பொழிவு படிப்படியாக அதிகரித்து செவ்வாய்க்கிழமை(அக். 28) காலை அல்லது பகல் வரை நீடிக்கும் என்றும், அதன்பின் மழைக்கு வாய்ப்பில்லை என்றும் தமிழ்நாடு வெதர்மேன் எச்சரித்துள்ளார். சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய கேடிசிசி பகுதிகலில் இதே வானிலை நிலவக் கூடும் என்றும் அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.