காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மோந்தா புயல்: தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம்! முழு விவரம்

தமிழகத்தில் இயக்கப்படும் ரயில்களின் நேரம் மாற்றம் செய்யப்பட்டிருப்பது பற்றி...

News image
Updated On :28 அக்டோபர் 2025, 3:11 am

இணையதளச் செய்திப் பிரிவு

மோந்தா புயல் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்றுநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திரம், ஒடிஸா வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், தமிழகத்தில் இருந்து ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களுக்குப் புறப்படும் 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ரயில் எண் 12842 - சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் - 28.10.2025 அன்று காலை 07.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28-10-2025 அன்று இரவு 23.30 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் 22870 - சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் - 28-10-2025 அன்று காலை 10.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 23.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் 22604 - விழுப்புரம் - கரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் - 28.10.2025 அன்று காலை 11.05 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28.10.2025 அன்று இரவு 7.00 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.

ரயில் எண் 12840 - சென்னை சென்ட்ரல் - ஹவுரா மெயில் ரயில் - 28.10.2025 அன்று 19.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 22.40 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது

ரயில் எண் 12664 - திருச்சிராப்பள்ளி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் - 28-10-2025 அன்று பகல் 13.35 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், மாலை 17.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.