மோந்தா புயல் எதிரொலியாக தமிழகத்தில் இருந்து புறப்படும் ரயில்களின் நேரம் மாற்றப்பட்டிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்றுநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆந்திரம், ஒடிஸா வழியாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், தமிழகத்தில் இருந்து ஆந்திரம் மற்றும் வடமாநிலங்களுக்குப் புறப்படும் 5 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் எண் 12842 - சென்னை சென்ட்ரல் - ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் - 28.10.2025 அன்று காலை 07.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28-10-2025 அன்று இரவு 23.30 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் 22870 - சென்னை சென்ட்ரல் - விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் ரயில் - 28-10-2025 அன்று காலை 10.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 23.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் 22604 - விழுப்புரம் - கரக்பூர் எக்ஸ்பிரஸ் ரயில் - 28.10.2025 அன்று காலை 11.05 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், 28.10.2025 அன்று இரவு 7.00 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் எண் 12840 - சென்னை சென்ட்ரல் - ஹவுரா மெயில் ரயில் - 28.10.2025 அன்று 19.00 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், இரவு 22.40 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது
ரயில் எண் 12664 - திருச்சிராப்பள்ளி - ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் - 28-10-2025 அன்று பகல் 13.35 மணிக்கு புறப்பட இருந்த நிலையில், மாலை 17.50 மணிக்கு புறப்படும் என மறு அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்.. வழித்தடம், பயண நேரம், இயங்கும் முறை என அனைத்து விவரங்களும்!

பொறியியல் பணிகள்: விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

குமரியில் கடல் நீா்மட்டம் தாழ்வு: 3 மணி நேரம் படகு சேவை பாதிப்பு

அரக்கோணம் ரயில் நிலையத்தில் தொடரும் ரயில்களின் தாமதம்: பயணிகள் கடும் அவதி
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



