மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மோந்தா புயல்! ஆந்திரம் - சென்னை விமானங்கள் ரத்து!

மோந்தா புயல் எதிரொலியாக ஆந்திரத்தில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் ரத்து

News image

பிரதிப் படம்

Updated On :28 அக்டோபர் 2025, 2:34 am

மோந்தா புயல் எதிரொலியாக சென்னை மற்றும் ஆந்திரம் இடையிலான 9 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோந்தா புயல், இன்று காலை தீவிரப் புயலாக வலுப்பெறும் நிலையில், இது ஆந்திர மாநில கடற்கரையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில், ஆந்திரத்திலிருந்து சென்னைக்கு வரும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மேலும், சென்னையிலிருந்து ஆந்திரம் செல்லும் 3 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

மோந்தா புயல், மசூலிப்பட்டினம் - கலிங்கப்பட்டினம் இடையில் இன்றிரவு கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், தற்போது மசூலிப்பட்டினத்தில் இருந்து 230 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.

புயலின் காரணமாக, விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், ஆந்திர கடலோரப் பகுதி வழியாகச் செல்லும் பல ரயில்களின் புறப்பாடு நேரம் மாற்றம் என்றும் ரயில்வே அறிவித்துள்ளது.

Summary

Montha Cyclone: 6 Flights canceled ar Chennai airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.