அடுத்த 2 மணிநேரம் எங்கெல்லாம் மழை தொடரும்?

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரம் மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
மழை
மழை EPS
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்துக்கு மழை தொடரும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள மோந்தா புயல், சற்றுநேரத்தில் தீவிரப் புயலாக வலுப்பெற்று இன்று மாலை ஆந்திரக் கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மோந்தா புயல் கரையை நெருங்கி வரும் நிலையில், ஆந்திரம், ஒடிஸா மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், விழுப்புரம் தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (அக். 28) காலை 10 மணிவரை மிதமான மழை தொடரும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Summary

Rain will continue for the next 2 hours.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com