பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

தென்காசியில் மாணவிக்கு கட்டப்படும் வீடு! முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு

தென்காசியில் மாணவிக்கு கட்டப்படும் வீட்டை முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.

News image
முதல்வர் ஸ்டாலின்.
Updated On :29 அக்டோபர் 2025, 6:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

நான் முதல்வன் திட்டத்தில் பயின்று முதல் மதிப்பெண் எடுத்த அரசுப் பள்ளி மாணவி பிரேமாவுக்கு, கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு கட்டப்படும் நிலையில், அதனை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நெல்லை கலைஞர் கனவு இல்லத் திட்ட பயனாளியான மாணவி பிரேமா வீட்டுக்கு இன்று காலை நேரடியாகச் சென்றார் முதல்வர் ஸ்டாலின்.

நான் முதல்வன் திட்டத்தில் பயின்ற மாணவி பிரேமா, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்வில் பங்கேற்றபோது, முதல்வர் ஸ்டாலினிடம், தன்னுடைய தந்தைக்காக ஒழுகாத வீடு வேண்டும் என்று கோரியிருந்தார். இதனைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், அந்த மேடையிலேயே மாணவி பிரேமாவுக்கு கலைஞர் கனவு இல்லத்திட்டத்தின் கீழ் வீடு ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், மாணவி பிரேமாவுக்கு தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் கட்டப்பட்டு வரும் வீட்டை முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் படித்து தற்போது தனியார் நிறுவனத்தில் வேலை பெற்றிருக்கும் தென்காசியைச் சேர்ந்த பிரேமா, கல்வியில் சிறந்த தமிழ்நாடு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, தன்னைக் கஷ்டப்பட்டு படிக்க வைத்த என் தந்தை, மழையில் ஒழுகும் வீட்டில் வாழ்ந்து வருவதாகக் கூறி கண்ணீர் விட்டார். இதைக் கேட்ட முதல்வர் ஸ்டாலின், அவருக்கு புதிய வீடு கட்டிக் கொடுக்குமாறு உத்தரவிட்டார்.

ஒழுகும் வீட்டில் அப்பா இருப்பாரே என்ற கவலை இனி பிரேமாவுக்கு வேண்டாம். புதிய வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஆணையை வழங்கியிருக்கிறேன் என்று ஸ்டாலின் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது தென்காசியில் கட்டப்பட்டு வரும் வீட்டை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin personally inspected the house being built for the student in Tenkasi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.