மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பழனிசாமிதான் எங்கள் எதிரி; துரோகத்தை வீழ்த்த இணைந்துள்ளோம்! - ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன்

ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து பேட்டி

News image
ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் பேட்டி
Updated On :30 அக்டோபர் 2025, 8:25 am

இணையதளச் செய்திப் பிரிவு

துரோகத்தை வீழ்த்துவதற்கு மூவரும் இணைந்துள்ளோம் என ஓபிஎஸ், செங்கோட்டையன், டிடிவி தினகரன் இணைந்து கூட்டாக பேட்டியளித்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இணைந்து பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.

ஓபிஎஸ், செங்கோட்டையன் இருவரும் மதுரையில் இருந்து பசும்பொன்னுக்கு ஒரே காரில் பயணித்தனர். பின்னர் பசும்பொன் செல்லும் வழியில் தினகரனைச் சந்தித்துப் பேசினர்.

தேவர் நினைவிடத்தில் மூவரும் அஞ்சலி

தேவர் நினைவிடத்தில் மூவரும் அஞ்சலி

பின்னர் மூவரும் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

ஓபிஎஸ் பேசுகையில், 'பிரிந்து கிடக்கும் அதிமுகவினரை ஒன்றிணைக்கவே பசும்பொன்னில் இன்று இணைந்திருக்கிறோம். அதிமுக ஒன்றிணைய வேண்டும், மீண்டும் தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று நோக்கத்தில் தேவரின் சன்னதியில் சபதம் மேற்கொண்டிருக்கிறோம். பசும்பொன்னில் இருந்து இந்த கூட்டணி தொடரும்' என்றார்.

டிடிவி தினகரன் பேசுகையில், "2 ஆண்டுகளுக்கு முன்பே எங்களுடைய கூட்டணி இருக்கிறது. துரோகத்தை வீழ்த்துவதற்கு எம்ஜிஆர், ஜெயலலிதாவின் ஆட்சியைக் கொண்டு வர தொண்டர்கள் அனைவரையும் ஒன்றிணைக்க, ஓபிஎஸ் செங்கோட்டையன் எங்களுடன் இணைந்திருக்கிறார்கள். தேர்தலில் ஒன்றிணைந்து நாங்கள் பணியாற்றவிருக்கிறோம்.

துரோகத்தை வீழ்த்துவதற்குதான் அமமுக உருவாக்கப்பட்டது. நாங்கள் ஜெயலலிதாவின் தொண்டர்கள். அதனடிப்படையில் இணைந்திருக்கிறோம்.

சசிகலா இந்த கூட்டணியில் உறுதியாக கூட்டணியில் இணைகிறார். எங்களுடைய பணிகள் பற்றி வருங்காலத்தில் கொஞ்சம்கொஞ்சமாக தெரிந்துகொள்வீர்கள்" என்று கூறினார்.

summary

OPS, Sengottaiyan, TTV Dinakaran press meet at pasumpon

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.