ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் திமுக அமைச்சர் தோல்வி! தவெக வெற்றி!தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை முடிந்தது: தவெக 108, திமுக 59 இடங்களில் வெற்றி!அஸ்ஸாமில் 3வது முறையாக பாஜக ஆட்சி! காங்கிரஸுக்கு கடும் சரிவு!கொல்கத்தாவில் பாலியல் கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவரின் அம்மா தேர்தலில் வெற்றி!5 மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வி: பிரதமர் மோடி விஜய்க்கு வாழ்த்தும், முதல்வர் ஸ்டாலினுக்கு ஆறுதலும் தெரிவித்த கமல்!பெரும்பான்மை இல்லை! விஜய் முதல்வராவது எப்படி? பாஜகவுக்கு கை கொடுத்த உதகை!மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி!
/

தோனி மனுவை நிராகரிக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்த மேல்முறையிட்டு வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image
Updated On :1 நவம்பர் 2025, 2:15 am IST

ரூ.100 கோடி மானநஷ்டஈடு கேட்டு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி தொடா்ந்த வழக்கை நிராகரிக்கக் கோரி, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்த மேல்முறையிட்டு வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஐபிஎல் சூதாட்டம் குறித்து விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா், இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் தோனி சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தனியாா் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் கூறியிருந்தாா்.

இதன்மூலம் தனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாகக் கூறி, ரூ.100 கோடி மானநஷ்டஈடு கேட்டு, ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் மற்றும் தனியாா் தொலைக்காட்சிக்கு எதிராக கடந்த 2014-ஆம் ஆண்டு, சென்னை உயா்நீதிமன்றத்தில் தோனி வழக்குத் தொடா்ந்தாா்.

இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்த மனுவை தனிநீதிபதி தள்ளுபடி செய்தாா். இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோா் அடங்கிய அமா்வு, முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமாா் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.