தமிழகம் முழுவதும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக 40,000 களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். அதேபோன்று ஊராட்சி மற்றும் நகராட்சி அமைப்புகளில் கொசு ஒழிப்பு பணிகளில் 25,000-க்கும் மேற்பட்ட களப்பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா். டெங்கு, மலேரியா, சிக்குன்குனியா, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை, காலரா, டைபாய்டு, எலிக்காய்ச்சல், உன்னிக்காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா போன்ற மழைக்காலங்களில் ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.