நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

நெல் கொள்முதல்: 1.59 லட்சம் விவசாயிகளுக்கு ரூ. 2,801 கோடி - அமைச்சா் சக்கரபாணி

தமிழ்நாட்டில் 1.59 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,801 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளது.

News image

அமைச்சர் சக்கரபாணி - கோப்புப்படம்.

Updated On :1 நவம்பர் 2025, 2:45 am IST

தமிழ்நாட்டில் 1.59 லட்சம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.2,801 கோடி தொகை வழங்கப்பட்டுள்ளதாக உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி தெரிவித்தாா்.

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்ட அறிக்கைக்கு வெள்ளிக்கிழமை பதிலளித்து அமைச்சா் சக்கரபாணி வெளியிட்ட அறிக்கை:

நிகழாண்டில் இதுவரை 1,892 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 1.59 லட்சம் விவசாயிகளிடம் இருந்து 11.77 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது

நெல்லை அளித்த விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,840.25 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு நேரடி நெல் கொள்முதல் நிலையத்திலும் தினசரி ஆயிரம் மூட்டைகள் வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

மேலும், 13 மாவட்டங்களில் 127 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கூடுதல் இயந்திரங்களைப் பயன்படுத்தி ஆயிரம் மூட்டைகளுக்கும் அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மாவட்டங்களில் 4 நாள்களுக்கு நெல் கொள்முதல் பணிகளில் இடையூறு ஏற்பட்டது. தற்போது இயல்புநிலை திரும்பியதால், நெல் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன என்று அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.