தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ராஜராஜ சோழன் சதய விழா! 400 நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!!

ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு 400 நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது.

News image
மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா
Updated On :31 அக்டோபர் 2025, 10:07 am

இணையதளச் செய்திப் பிரிவு

மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு 400 நாட்டிய கலைஞர்கள் பங்குபெற்று நடனமாடும் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி விழா நடைபெறவிருக்கிறது.

மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 வது சதய விழா இரண்டு நாள்கள் அரசு விழாவாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.

இன்று முதல் நாள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாமன்னர் ராஜ ராஜ சோழன் வேடமணிந்து மன்னர் வருவது போல சாரட்டு வண்டியில் அமர்ந்து மன்னர் வர, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய நகர்புற வீதி உலா தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தஞ்சை பெரிய கோவில் வரை நடைபெற்றது.

பின்பு பெரிய கோவில் வந்த மன்னரை போற்றும் வகையிலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் 400 நாட்டிய கலைஞர்கள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் மாணவிகள் பங்கு பெற்று நாட்டியம் ஆடினர். ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.