ராஜராஜ சோழன் சதய விழா! 400 நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி!!
ராஜராஜ சோழன் சதய விழாவை முன்னிட்டு 400 நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நடைபெற்றது.


மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழாவை முன்னிட்டு 400 நாட்டிய கலைஞர்கள் பங்குபெற்று நடனமாடும் பரதநாட்டிய புஷ்பாஞ்சலி விழா நடைபெறவிருக்கிறது.
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1040 வது சதய விழா இரண்டு நாள்கள் அரசு விழாவாக தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது.
இன்று முதல் நாள் தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் பங்குபெறும் மாமன்னர் ராஜ ராஜ சோழன் வேடமணிந்து மன்னர் வருவது போல சாரட்டு வண்டியில் அமர்ந்து மன்னர் வர, பல்வேறு கலை நிகழ்ச்சிகளுடன் கூடிய நகர்புற வீதி உலா தஞ்சை அரண்மனை வளாகத்தில் இருந்து தஞ்சை பெரிய கோவில் வரை நடைபெற்றது.
பின்பு பெரிய கோவில் வந்த மன்னரை போற்றும் வகையிலும் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் 400 நாட்டிய கலைஞர்கள் பங்கு பெற்ற புஷ்பாஞ்சலி நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மாணவிகள் பங்கு பெற்று நாட்டியம் ஆடினர். ஏராளமான பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...