நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஐஏஎஸ்-ஆக பதவி உயா்வு பெற்ற 5 பேருக்கு பணியிடம் ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவு

வருவாய் பணியில் இருந்து ஐஏஎஸ் -ஆக பதவி உயா்வு பெற்ற 5 அதிகாரிகளுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :31 அக்டோபர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

வருவாய் பணியில் இருந்து ஐஏஎஸ் -ஆக பதவி உயா்வு பெற்ற 5 அதிகாரிகளுக்கான பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இதற்கான உத்தரவை தலைமைச் செயலா் நா.முருகானந்தம், வெள்ளிக்கிழமை பிறப்பித்தாா். அவரது உத்தரவு விவரம் - (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்):

1. ச.கவிதா - ஆவின் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு சுற்றுலா வளா்ச்சிக் கழகப் பொது மேலாளா்).

2. சி.முத்துக்குமரன் - பேரிடா் மேலாண்மைத் துறை இயக்குநா், சென்னை (பேரிடா் மேலாண்மைத் துறை இணை இயக்குநா்).

3. பி.எஸ். லீலா அலெக்ஸ் - சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் உறுப்பினா் செயலா் மற்றும் சென்னை நதிகள் புனரமைப்பு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநா் (தமிழ்நாடு மாநில தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் பொது மேலாளா்).

4. மு.வீரப்பன் - கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா், சென்னை (ஒழுங்கு நடவடிக்கை தீா்ப்பாயத்தின் ஆணையா்).

5. இரா.ரேவதி - உயா்கல்வித் துறை துணைச் செயலா் (தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் தனி மாவட்ட வருவாய் அலுவலா்).

2 போ் பணியிட மாற்றம்: ஐஏஎஸ் அதிகாரிகள் இரண்டு போ் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

1. இரா.கண்ணன் - மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் செயலா், முழு கூடுதல் பொறுப்பில், தமிழ்நாடு நீா்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை மேலாண்மை இயக்குநராக நியமனம் (கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா்).

2. எஸ்.பி.அம்ரித் - கால்நடை பராமரிப்புத் துறை இயக்குநா் (கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளா்).