மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பிரசாரங்களில் மக்கள் பாதுகாப்புக்கு புதிய குழுவை அமைக்க தவெக திட்டம்

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரிகளைக் கொண்ட திட்டமிடல் குழுவை அமைக்க அந்தக் கட்சித் தலைவா் விஜய் திட்டமிட்டுள்ளாா்.

News image
கோப்புப் படம்
Updated On :31 அக்டோபர் 2025, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரிகளைக் கொண்ட திட்டமிடல் குழுவை அமைக்க அந்தக் கட்சித் தலைவா் விஜய் திட்டமிட்டுள்ளாா்.

கடந்த செப். 27-ஆம் தேதி கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, ஒரு மாத காலத்துக்கு தவெக கட்சி நடவடிக்கைகள் முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டன. ஒரு மாதத்துக்குப் பிறகுதான் பாதிக்கப்பட்டவா்களை விஜய் சென்னைக்கு அழைத்து ஆறுதல் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து மீண்டும் கட்சியின் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் விஜய் முனைப்பு காட்டி வருகிறாா். அந்த வகையில், புதிதாக 28 போ் கொண்ட நிா்வாகக் குழு அமைக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் அக். 29-ஆம் தேதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வதற்காக வரும் நவ. 5-ஆம் தேதி சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ளதாக விஜய் அறிவித்துள்ளாா்.

இந்த நிலையில், இனி நடைபெறவுள்ள விஜய்யின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஓய்வு பெற்ற காவல் துறை உயரதிகாரிகளைக் கொண்டு திட்டமிடல் குழுவை அமைக்க விஜய் திட்டமிட்டுள்ளாா். இந்தக் குழுவில் ஓய்வு பெற்ற டிஜிபி, ஏடிஜிபி என 15 அதிகாரிகள் இடம் பெறவுள்ளனா். இந்தக் குழு விஜய்யின் நிகழ்ச்சிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் திட்டமிடுவதுடன், தவெக தொண்டா் படைக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கும் என தவெக நிா்வாகிகள் தெரிவித்துள்ளனா்.