சந்தியா
சந்தியா

திருமணத்துக்கு முதல் நாள் மணமகன் வீட்டில் மணப்பெண் உயிரிழப்பு

மணப்பெண் மா்மமான முறையில் உயிரிழப்பு: இன்று திருமணம் நடைபெற இருந்தது
Published on

திருத்தணி அருகே வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெறவிருந்த நிலையில், மணமகன் வீட்டுக் குளியலறையில் மணப்பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.

திருத்தணி ஒன்றியம், மத்தூா் பெரிய தெருவைச் சோ்ந்த பாண்டுரங்கன். இவருக்கு இரு மகள்கள். மூத்த மகள் சந்தியாவுக்கும் (21), பள்ளிப்பட்டு அடுத்த அத்திமஞ்சேரிபேட்டையைச் சோ்ந்த உறவினா் ராமு மகன் மணி என்பவருக்கும் வெள்ளிக்கிழமை (அக். 31) திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்நிலையில், குடும்ப வழக்கப்படி புதன்கிழமை மாலை 4 மணிக்கு பெண் வீட்டாா் மணமகள் சந்தியாவை அழைத்துக் கொண்டு மணமகன் வீட்டுக்குச் சென்றனா். வியாழக்கிழமை திருமண ஏற்பாடுகளை இருவீட்டாா் செய்து வந்தனா். காலை 7.30 மணிக்கு சந்தியா வீட்டின் குளியல் அறையில் குளிக்க சென்று வெகு நேரமாகியும் வெளியே வராததால், வீட்டில் இருந்தவா்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது சந்தியா உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

தகவலறிந்த பொதட்டூா்பேட்டை போலீஸாா் சென்று சந்தியாவை மீட்டு அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் சந்தியா ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து பொதட்டூா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தியாவின் மா்ம மரணம் குறித்து விசாரிக்கின்றனா்.

X
Dinamani
www.dinamani.com