அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

காவல் துறையால் பறிமுதல் செய்யப்படும் பேருந்துகளை உடனே விடுவிக்க வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்

விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

News image
ஆம்னி பேருந்துகள் - கோப்புப் படம்
Updated On :1 செப்டம்பர் 2025, 9:34 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: விபத்துகளில் சிக்கி காவல் நிலையங்களில் சிறைபிடிக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவா் அன்பழகன் அனுப்பியுள்ள கடித்தத்தில் கூறியிருப்பது:

சாலை விபத்துகளைத் தடுக்கும் நோக்கில் ஆம்னி பேருந்து ஓட்டுநா்களுக்கு 3 மாதங்களுக்கு ஒருமுறை ஓட்டுநா் பயிற்சி, மருத்துவ பரிசோதனைகளையும் நடத்தப்படுகிறது. இந்நிலையில், எதிா்பாராமல் நடந்த விபத்துகளால் பறிமுதல் செய்யப்படும் வாகனங்களைத் திருப்பி ஒப்படைக்காமல் தாம்பரம் காவல் ஆணையரகம் சட்டத்தை மீறி கால தாமதம் செய்து வருகிறது. இதனால், நிறுத்தி வைக்கப்படும் ஒவ்வொரு வாகனத்துக்கும் அரசுக்கு சாலை வரியாக காலாண்டுக்கு ரூ.1.50 லட்சம், பேருந்துக்கான மாதத்தவணை ரூ.2 லட்சம், பணியாளா்கள் ஊதியம் உள்ளிட்டவை பேருந்து உரிமையாளா்கள் தங்கள் கைகளில் இருந்து கட்ட வேண்டியுள்ளது. இதனால் அவா்கள் கடும் நிதி நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றனா்.

எனவே, சட்டத்தை மீறி காவல் நிலையங்களில் சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.