அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

திருவள்ளூரில் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஊழியர்கள் போராட்டம்

திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

News image
காக்களூர் சிட்கோவில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர் கூட்டு நடவடிக்கை குழுவினர்.
Updated On :1 செப்டம்பர் 2025, 6:56 am

இணையதளச் செய்திப் பிரிவு

திருவள்ளூரில் டாஸ்மாக் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே காக்களூர் மேற்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அனைத்து டாஸ்மாக் கூட்டுக் குழுவினர் திங்கள்கிழமை திடீரென முற்றுகையிட்டனர்.

அப்போது திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் காலி பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டத்திற்கு ஊழியர்களின் கோரிக்கைகளை எடுத்துரைக்க நீதிமன்ற உத்தரவின்படி குழு அமைத்து நல்ல முடிவு எடுக்க வேண்டும்.

அதுவரையில் மேற்கு மாவட்டத்தில் ஸ்டிக்கர் ஒட்டமாட்டோம், காலி பாட்டில்களை வாங்க மாட்டோம் என்பதை வலியுறுத்தி டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 200-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Story image

summary

TASMAC employees staged a protest by laying siege to the Thiruvallur West district office.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.