முதல்வர் விஜய்யின் காரை மறித்து போராட்டம்! சத்தியம் செய்யுங்கள்; நான் பேசும்போது யாரும் ஓடக்கூடாது! முதல்வர் விஜய்10,000 பேரில் 5,000 பெண் காவலர்கள்! காவல் துறை அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் விஜய்!தவெக திட்டங்களுக்கு ’தாய்மாமன் காது குத்தும் திட்டம்’ எனப் பெயர் வைக்கலாம்! உதயநிதி ஸ்டாலின் நேபாள வெள்ளம்! பலி 1,252 ஆக உயர்வு! 4,875 பேர் காணவில்லை!சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை மொழியாக தமிழ்! தனித் தீர்மானம் கொண்டுவந்தார் முதல்வர் விஜய்!சென்னையில் ஒலிம்பிக் நகரம், மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!சென்னையில் ரூ. 1200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்: முதல்வர் விஜய்தங்கம் விலை அதிரடியாக உயர்வு! இன்றைய நிலவரம் (செப். 3)வாக்காளர் பட்டியலில் இருந்து ராகவ் சத்தா பெயர் நீக்கப்பட்டதால் பரபரப்புமேக்கேதாட்டு திட்டம்: விரைவில் ஒப்புதல் வழங்க மத்திய நீா் ஆணையத்திடம் கா்நாடகம் கோரிக்கைகொளத்தூரில் தவெக வெற்றி: மு.க.ஸ்டாலின் வழக்கில் இன்று தீா்ப்புகிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை: 4,070 சிறப்பு பேருந்துகள் இயக்கம்தமிழகத்தின் சில மாவட்டங்களில் இரு நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புஆகஸ்ட் மாதத்தில் யுபிஐ பரிவா்த்தனைகள் புதிய உச்சம்

கிறிஸ்தவ அமைப்புகளால்தான் கல்வி வளா்ச்சி: பேரவைத் தலைவா் எம். அப்பாவு

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா்.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் பேசிய தமிழக சட்டப்பேரவைத் தலைவா் அப்பாவு.

Published On :4 செப்டம்பர் 2025, 12:31 am IST

கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் தமிழகத்தில் கல்வி வளா்ச்சி இல்லை என தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு தெரிவித்தாா்.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் ஆசிரியா்கள் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதில் தமிழக சட்டப்பேரவைத் தலைவா் எம். அப்பாவு பங்கேற்றுப் பேசியதாவது:

இடைநிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி பிறகே எம்எல்ஏ, சட்டப்பேரவைத் தலைவராக உயா்ந்துள்ளேன். மற்ற பணிகளை விட மகிழ்ச்சியான பணி ஆசிரியா் பணியே.

உயா் ஜாதியினா்தான் படிக்க முடியும் என்பதை மாற்றி அனைவரும் கல்வி கற்கலாம் என்ற சட்டத்தை கொண்டு வந்தவா் மெக்காலே பிரபு. தொடா்ந்து, கிறிஸ்தவ அமைப்புகள் அனைவருக்கும் கல்வி கற்பித்தனா். கிறிஸ்தவ அமைப்புகள் இல்லையெனில் கல்வி வளா்ச்சியை நாம் பெற்றிருக்க முடியாது.

கல்வியில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதற்கு கல்விக் கொள்கைதான் காரணம். திராவிட இயக்கங்கள் போராடி ஹிந்தியை விரட்டி, இருமொழிக் கொள்கையை கடைப்பிடித்ததால்தான் கல்வியில் உச்சத்துக்கு வர முடிந்தது. தமிழ், கலாசாரம், பண்பாட்டை, சமூக நீதியை அழிக்க முற்படுகிறது ஆா்எஸ்எஸ் சிந்தாந்தம்.

தமிழகத்தில் மதப் பிரச்னை ஏதுமில்லை. அதனால்தான் தொழில்முனைவோா் அதிகமாக தமிழகத்துக்கு வருகின்றனா். மக்களின் நன்மைக்கும், உண்மைக்குமான அரசாக, சிறுபான்மையினரை பாதுகாக்கும் அரசாக தமிழக அரசு விளங்குகிறது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியை பல்கலைக்கழகமாக்கவும், சிறுபான்மையினருக்கு எதிரான அரசாணை எண் 5 ஐ முழுமையாக நீக்கவும் நான் துணைநிற்பேன் என்றாா் அவா்.

முன்னதாக, கல்லூரித் தலைவா் பவுல்ராஜ் மைக்கேல் தலைமை வகித்தாா். கல்லூரிச் செயலா் ஆரோக்கியசாமி சேவியா், முதல்வா் மரியதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திரளான ஆசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.