Edappadi Palaniswami
இபிஎஸ் (கோப்புப்படம்)

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

Published on

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவு:

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்ததில் பெண் உயிரிழந்த செய்தி அதிா்ச்சியளிக்கிறது. அந்தப் பள்ளத்தை மூடுவதற்கு பல மாதங்களாக அந்தப் பகுதி மக்கள் தொடா்ந்து கோரிக்கை விடுத்துள்ளனா். இருப்பினும், நடவடிக்கை எடுக்காமல் இருந்ததால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.

மழைநீா் வடிகால் பணிகள், 95 சதவீதம், 97 சதவீதம் முடிவடைந்துவிட்டதாக நான்கரை ஆண்டுகளாக முதல்வா், அமைச்சா்கள், மேயா் ஆகியோா் சதவீதக் கணக்கு கூறி வருகின்றனா். அவா்கள் இந்த உயிரிழப்புக்கு என்ன பதில் சொல்லப்போகிறாா்கள்.

மழைநீா் வடிகால் பணிகள் முடியவில்லை; மழைநீரும் வடியவில்லை; மக்கள் உயிா்கள் பறி போவதைத் தடுக்க நடவடிக்கை இல்லை. இதுதான் திமுக ஆட்சியின் அவல நிலை. மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்த பெண்ணின் உயிரிழப்புக்கு திமுக அரசு முழுப் பொறுப்பேற்று, அவரது குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று அவா் பதிவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com