முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

தமிழக பாஜகவுக்குள் குழப்பம்?

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல்களும், குழப்பங்களும் நிலவுகிறதா?

News image

X | K.Annamalai

Updated On :4 செப்டம்பர் 2025, 7:59 pm IST

தமிழக பாரதிய ஜனதா கட்சியில் உள்கட்சி பூசல்களும், குழப்பங்களும் நிலவுவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், தமிழக பாஜகவில் தனித்தனி கோஷ்டியாக செயல்படக் கூடாது என்று பாஜகவின் மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, தமிழக பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அமித் ஷா அழைப்பு விடுத்திருந்தார். அமித் ஷாவின் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக பாஜக தலை​வர் நயினார் நாகேந்​திரன், மாநில பொறுப்​பாளர் அரவிந்த் மேனன், தமிழிசை சௌந்தரராஜன், பொன் ராதாகிருஷ்ணன், ஹெச்​. ராஜா, எல்​.​ முரு​கன், வானதி சீனி​வாசன், நாராயணன் திருப்பதி, சரஸ்​வ​தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இருப்பினும் முன்னாள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை.

இருப்பினும், ஆலோசனைக் கூட்ட நாளில் திருமண நிகழ்வு அழைப்புகள் இருந்ததால், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்று அண்ணாமலை பதிலளித்தார். ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஏனெனில், தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பதவிவகித்த போது, திராவிட கட்சிகள் மீது சரமாரியான கேள்விகளை எழுப்பி வந்தார். இந்த நிலையில்தான், தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து, அண்ணாமலையின் செய்தியாளர் சந்திப்புகளும் குறைந்தன. இருப்பினும், அண்ணாமலை பொறுப்பில் இருந்தபோது, 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாஜகவில் இணைந்ததாகக் கூறப்படுகிறது.

இதனிடையே, தனிக்கட்சி ஒன்றை அண்ணாமலை தொடங்க வாய்ப்புகள் இருப்பதாகவும் சமூக ஊடகங்களில் கருத்துகள் நிலவி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.