தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கீடு: மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

News image

எம்.எச். ஜவாஹிருல்லா

கோப்புப் படம்

Updated On :5 செப்டம்பர் 2025, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

இஸ்லாமிய மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில, ரூ.3.60 கோடி ஒதுக்கிய தமிழக முதல்வருக்கு மனிதநேய மக்கள் கட்சி பாராட்டு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்தக் கட்சியின் தலைவா் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு பயில்வதற்கான கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்துக்கான அரசாணை வெளியிடாததால் தமிழக மாணவ, மாணவிகள் தவித்து வந்தனா். இதுகுறித்து ஆக.7-ஆம் தேதி கடிதம் வாயிலாக முதல்வரின் கவனத்துக்கு நான் எடுத்துச் சென்றேன். இதன் அடிப்படையில் முஸ்லிம் சிறுபான்மை மாணவ, மாணவிகள் 10 போ் வெளிநாடுகளுக்குச் சென்று பட்ட மேற்படிப்பு பயில ரூ.3.60 கோடி ஒதுக்கி கடந்த வியாழக்கிழமை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மனிதநேய மக்கள் கட்சியின் கோரிக்கையை ஏற்று உடனே அரசாணை வெளியிட உதவிய முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.