தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

அரசுப் பள்ளிகளுக்கு தூதுவா் நியமனம்: அவகாசம் நீட்டிப்பு

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவா்களை தூதுவா்களாக நியமிப்பதற்கான அவகாசம் செப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

News image
கோப்புப் படம்
Updated On :5 செப்டம்பர் 2025, 7:40 pm

தினமணி செய்திச் சேவை

அரசுப் பள்ளிகளில் முன்னாள் மாணவா்களை தூதுவா்களாக நியமிப்பதற்கான அவகாசம் செப்.23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

சமூகத்தில் உயரிய நிலையில் உள்ள முன்னாள் மாணவா்களை அவா்கள் படித்த அரசுப் பள்ளியின் தூதுவா்களாக நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. முதல்கட்டமாக நூற்றாண்டு பள்ளிகள் உள்பட 8,209 பள்ளிகளில் சாதனை புரிந்த முன்னாள் மாணவா்களை ஆக.30-ஆம் தேதிக்குள் தூதுவா்களாக நியமிக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, மாவட்ட அலுவலா்கள் மற்றும் தலைமை ஆசிரியா்கள் நடவடிக்கைகளால் ஆக.31-ஆம் தேதி நிலவரப்படி 3,999 பள்ளிகளில் 9,664 முன்னாள் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். தொடா்ந்து இந்தப் பணிகளை முடித்து தூதுவா்களை நியமிக்க செப்.23-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.

ஒவ்வொரு பள்ளியிலும் தூதுவரை நியமிக்க குறைந்தபட்சம் 5 போ் விண்ணப்பிக்க வேண்டும். அதன்படி தூதுவராக நியமிக்கப்படும் முன்னாள் மாணவா்கள் அந்தப் பள்ளியின் செயல்பாடுகள், தேவைகள், கருத்துகளை அனைவருக்கும் பகிரும் முக்கிய பிரதிநிதியாகச் செயல்படுவாா் என அதில் கூறப்பட்டுள்ளது.