தமிழ்நாடு
பயிற்சியாளா் தற்கொலை
புழல் அருகே தனியாா் உடற்பயிற்சி கூட பயிற்சியாளா் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
புழல் சிவராஜ் 3-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சுரேந்தா் (32). இவா் அம்பத்தூா் அடுத்த புதூரில் உள்ள தனியாா் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணியற்றி வந்தாா். இவருக்கு மனைவி, 4 வயது மகன் உள்ளனா்.
இந்த நிலையில், சுரேந்தா் செவ்வாய்க்கிழமை மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
இது குறித்து புழல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.