குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை: டிடிவி தினகரன்

நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியைக் கையாளத் தெரியவில்லை என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

News image

டிடிவி தினகரன்

Updated On :6 செப்டம்பர் 2025, 11:38 am IST

சட்டப்பேரவைத் தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது மற்றும் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுகிறோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலா் டிடிவி தினகரன் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆட்சி அமைக்கும் கூட்டணியில் அமமுக இருக்கும். அண்ணாமலைதான், பாஜகவுடன் அமமுகவை கூட்டணி அமைக்க முழு முயற்சி எடுத்தவர். அவரால்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தோம், ஒன்றாக செயல்பட்டோம். அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கொண்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.

ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காதது குறித்து நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவமானது. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை சரியாகக் கையாளத் தெரியவில்லை.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்ல முடியும்? கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு பாஜக காரணமல்ல, தொண்டர்களின் முடிவால் வெளியேறினோம். நிதானமாக எடுத்த முடிவுதான் இது என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், 2026 தேர்தலில் எங்களுக்கு பல வாய்ப்புகள் உள்ளன. மூப்பனார் நினைவிட நிகழ்ச்சிக்கு ஜி.கே. வாசன் அழைப்பு விடுத்திருந்தாரே தவிர, வேறு யாரும் எங்களுக்கு எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை. தேஜ கூட்டணியில் அமமுக மீண்டும் இணைய வேண்டும் என்றால், ஒரு நிபந்தனையை நிறைவேற்ற வேண்டும். அது என்னவென்றால், எதைச் செய்ய வேண்டுமோ, அதை செய்யுங்கள் என பாஜக கூட்டணிக்கு மறைமுகமாக நிபந்தனை விதித்திருக்கிறார் டிடிவி தினகரன்.

தினகரன் பேசும்போது, அண்ணன் பழனிசாமி என்று கூறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, சொன்னாலும் சொல்லாவிட்டாலும் எடப்பாடி பழனிசாமி அண்ணன்தான் என்று பதிலளித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.