தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து தினகரன் வெளியேற யார் காரணம்? என்பதற்கு பதிலளித்து தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியிருக்கிறார்.
முன்னதாக, மதுரையில் இன்று(செப். 6) செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்த கேள்விக்கு, “அண்ணாமலை தலைவராக இருந்தவரை கூட்டணியை நல்ல முறையில் கொண்டு சென்றார். ஓ. பன்னீர்செல்வமும், நானும் இணைந்து செயல்பட வேண்டும் என்பது சில ஆண்டுகளுக்கு முன்பே முடிவு செய்தோம்.
ஆனால், பிரதமர் நரேந்திர மோடி, ஓ. பன்னீர்செல்வத்தை சந்திக்காதது குறித்து நயினார் நாகேந்திரன் அளித்த பதில் ஆணவமானது. நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை சரியாகக் கையாளத் தெரியவில்லை.
நான் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என பாஜக எப்படி சொல்ல முடியும்? கூட்டணியிலிருந்து வெளியேறியதற்கு பாஜக காரணமல்ல, தொண்டர்களின் முடிவால் வெளியேறினோம். நிதானமாக எடுத்த முடிவுதான் இது” என்று கூறினார்.
இந்த நிலையில், இது குறித்து நயினார் நாகேந்திரன் பேசியதாவது, “ஒருமித்த கருத்துகளைப் பிரதிபலிப்போர் ஒருங்கிணைந்தால், திமுக ஆட்சியதிகாரத்துக்கு மீண்டும் வர முடியாது. எனினும், தினகரன் இந்தக் கூட்டணியிலிருந்து வெளியேறிவிட்டார். ஆனால், அதற்கு நான் பொறுப்பாக முடியாது.
இந்தச் சூழலில், அவர்களை அணுகி மீண்டும் ஒற்றுமையுடன் இணைந்து செய்லபடுவது தொடர்பாக அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட நான் தயாராக இருக்கிறேன். திமுக ஆட்சியில் இருக்கக்கூடாது என்று நினைப்பவர்கள், அதேபோல, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மீது பாசம் வைத்திருப்பவர்கள், கட்டாயம் ஒன்றிணைந்து அதன்மூலம் திமுகவை வெளியேற்ற வேண்டும்.
நான் தனிப்பட்ட முறையில், டிடிவி தினகரனுடனும் ஓ. பன்னீர்செல்வத்துடனும் நேரடியாகச் சந்தித்துப் பேசத் தயாராக இருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், அஇஅதிமுகவில் உள்ள ஒவ்வொருத்தரும் ஒன்றிணைய வேண்டும்” என்றார்.
Summary
Nainar Nagendran says, Dhinakaran walked out of the alliance, and I cannot be held responsible for that
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ்: நயினார் நாகேந்திரன் விமர்சனம்!
அரசு நிா்வாகத்தில் தவெகவினா் தலையிடுவதைத் தடுக்க வேண்டும்: டிடிவி தினகரன்
பெண்களைத் துரத்தும் தவெக நிர்வாகிகள்! சிங்கப்பெண் பாதுகாப்புப் படை தூங்குகிறதா? நயினார் நாகேந்திரன்

ரூ. 4 கோடி பணம் பறிமுதல்! சென்னை நீதிமன்றத்தில் ஆஜரான பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



