மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கெங்கவல்லியில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த முன்னாள் மாணவர்கள்!

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.

News image
35 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட முன்னாள் மாணவர்கள்
Updated On :7 செப்டம்பர் 2025, 12:32 pm

இணையதளச் செய்திப் பிரிவு

கெங்கவல்லியில் 35 வருடங்களுக்கு பிறகு முன்னாள் மாணவர்கள் சந்தித்து மகிழ்ந்தனர்.

கெங்கவல்லி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1988 - 1990 ஆம் ஆண்டுகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் கணித, அறிவியல், கலை, தெழில்பிரிவு குரூப்களில் பயின்ற அனைத்து மாணவ, மாணவிகளும் 35 வருடங்களுக்குப்பிறகு நடந்த சந்திப்பு, பள்ளியில் நடைபெற்றது. இதற்கு ஆசிரியர் முருகன் தலைமை வகித்தார்.

ஆத்தூர் துணிக்கடை அதிபர் எல்.செந்தில்குமார், ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர் ராஜாராம் வரவேற்றார். பட்டிமன்ற பேச்சாளர் கவிஞர் ஜோ. அருள்பிரகாஷ் சிறப்பு விருந்தினராக மாணவர்கள் அன்றும், இன்றும் குறித்து சிறப்புரையாற்றினார்.

இதில், திருவள்ளூர் மாவட்ட கல்வி அலுவலர் பி.அமுதா, தஞ்சை மருத்துவ கல்லூரி பேராசிரியை க.உமா உள்பட 150 பேருக்கு சிறந்த மாணவர் மற்றும் சிறந்த மாணவி விருதும், தற்போதைய கெங்கவல்லி தலைமையாசிரியர்கள் (ஆண்கள் பள்ளி) சாமிவேல், மகளிர் பள்ளி வசந்தாகுமாரி, மற்றும் முன்னாள் மாணவர்களுக்கு பயிற்றுவித்த 20 ஆசிரியர்கள் ஆகியோருக்கு சிறந்த நல்லாசான் விருதும், சேலம் டயட் விரிவுரையாளர் கலைவாணனுக்கு சிறந்த கல்வியாளர் விருது, கெங்கவல்லி ஆர்சி பள்ளி தலைமையாசிரியர் ஜாக்குலின் புஷ்பராணி, கெங்கவல்லி தனியார் மருத்துவர் மார்ட்டினா ஆகியோருக்கு சிறந்த சமூகசேவகி விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முன்னாள் மாணவர்கள் அனைவரும் குழு புகைப்படம் எடுத்து பழைய கால நினைவுகளை நினைவூட்டி மகிழ்ந்தனர். கெங்கவல்லி அரசு மகளிர் பள்ளிக்கு பிரிண்டரும், கெங்கவல்லி அரசு ஆண்கள் பள்ளிக்கு சுழல்கோப்பை, யுபிஎஸ் மற்றும் பேட்டரி ஆகியவைகளை அன்பளிப்பாக வழங்கினர். பா.மனோன்மணி நன்றி கூறினார்.

summary

Former students meet after 35 years in Kengavalli

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.