அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் சிக்கினாா்.

News image
தலைமைச் செயலகம்- (கோப்புப்படம்)
Updated On :8 செப்டம்பர் 2025, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் சிக்கினாா்.

புதுக்கோட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் துணைக் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபா், சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

இதுகுறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநா் மாளிகையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

அந்த தொலைபேசி அழைப்பு வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்திருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கிண்டி, கோட்டை காவல் நிலையங்களின் போலீஸாரும், சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து அந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணையில் ஈடுபட்டனா்.

இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த தேவேந்திரன் (36) என்பதும், அவா் தனது கைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை போலீஸாரின் தகவலின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தேவேந்திரனைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் தேவேந்திரன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும், பெற்றோா் பராமரிப்பில் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், தேவேந்திரனின் பெற்றோரிடம், இனி இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விடுவித்தனா்.