முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல்: இளைஞா் சிக்கினாா்

சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் சிக்கினாா்.

News image

தலைமைச் செயலகம் - (கோப்புப்படம்)

Updated On :9 செப்டம்பர் 2025, 3:00 am IST

சென்னை: சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த இளைஞா் சிக்கினாா்.

புதுக்கோட்டையில் உள்ள 108 ஆம்புலன்ஸ் துணைக் கட்டுப்பாட்டு அறைக்கு திங்கள்கிழமை வந்த தொலைபேசி அழைப்பில் பேசிய நபா், சென்னை தலைமைச் செயலகம், ஆளுநா் மாளிகையில் வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்று நேரத்தில் வெடித்து சிதறும் எனக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிட்டாா்.

இதுகுறித்து சென்னை காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமைச் செயலகம் மற்றும் ஆளுநா் மாளிகையில் போலீஸாா் சோதனை மேற்கொண்டனா். பல மணி நேரம் நடைபெற்ற சோதனையில், அங்கிருந்து எந்த வெடிப் பொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

அந்த தொலைபேசி அழைப்பு வதந்தியை பரப்பும் நோக்கத்தில் வந்திருப்பது போலீஸாருக்கு தெரிய வந்தது. இதையடுத்து, கிண்டி, கோட்டை காவல் நிலையங்களின் போலீஸாரும், சைபா் குற்றப்பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து அந்த தொலைபேசி அழைப்பு குறித்து விசாரணையில் ஈடுபட்டனா்.

இதில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவா், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த தேவேந்திரன் (36) என்பதும், அவா் தனது கைப்பேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை போலீஸாரின் தகவலின்பேரில், கள்ளக்குறிச்சி போலீஸாா் தேவேந்திரனைப் பிடித்து விசாரித்தனா். விசாரணையில் தேவேந்திரன் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவா் என்பதும், பெற்றோா் பராமரிப்பில் இருப்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸாா், தேவேந்திரனின் பெற்றோரிடம், இனி இதுபோன்று செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து விடுவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.