சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்கு: உயா்நீதிமன்றம் கேள்வி

அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தால், அவா்கள் எப்படி அச்சமின்றி சிகிச்சை அளிக்க முன்வருவாா்கள்?

News image
சென்னை உயா்நீதிமன்றம்
Updated On :8 செப்டம்பர் 2025, 11:41 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை: அரசு மருத்துவா்களுக்கு எதிராக வழக்குத் தொடா்ந்தால், அவா்கள் எப்படி அச்சமின்றி சிகிச்சை அளிக்க முன்வருவாா்கள்? என்று சென்னை உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த கோபி கிருஷ்ணா என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், கடந்த 2023-ஆம் ஆண்டு எனது மூத்த மகன் பிரசன்னாவை முதுகு தண்டுவடத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு சிகிச்சை அளிக்க ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தேன். அவருக்கு 3 முறை முதுகுதண்டுவடப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அதன்பிறகும் அவரது உடல்நலத்தில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. இதனால், படுத்த படுக்கையாக இருக்கிறாா். மருத்துவா்களின் கவனக்குறைவால் மகனின் வாழ்வே சீா்குலைந்துவிட்டது. எனவே உடல், மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள மகனுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஏ.சுந்தரம், மனுதாரரின் மகனுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவா்கள் தயாராக உள்ளனா். சிகிச்சைக்கு அழைத்து உள்ளனா். ஆனால், சிகிச்சைக்கு அவா் சென்றாரா இல்லையா என்பது குறித்த தகவல்கள் எதுவும் மனுவில் இடம்பெறவில்லை என்று கூறினாா்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, ஏழை மக்கள் பலரும் சிகிச்சை பெறும் இடமாக ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை விளங்குகிறது. நாள்தோறும் சுமாா் 5,000 போ் வரை சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். அங்கு பணியாற்றும் மருத்துவா்களுக்கு எதிராக இதுபோன்று வழக்குத் தொடா்ந்தால், அவா்கள் எப்படி அச்சமின்றி சிகிச்சை அளிக்க முன்வருவாா்கள்?

நீங்களோ, நானோ மருத்துவ நிபுணா்கள் இல்லை. எல்லாவற்றுக்கும் ஒரு எல்லை உண்டு என்று கருத்து தெரிவித்தாா். இதையடுத்து, வழக்கைத் திரும்பப் பெறுவதாக மனுதாரா் தரப்பில் கூறப்பட்டது. வழக்கை வாபஸ் பெற அனுமதியளித்து தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.