கூட்டணி வெற்றியைக் கேள்விக்குள்ளாக்கும் காங்கிரஸ் அணுகுமுறை! திருமாவளவன் மார்ச் 28 முதல் விஜய் பிரசாரம்!வங்கதேசத்தில் ஆற்றில் கவிழ்ந்த பேருந்து! 23 பேர் பலி; பலர் மாயம்! இந்தியா உள்பட 5 நட்பு நாடுகளுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை திறப்பு!ரயில் விபத்துகள் 90% குறைந்துவிட்டன- நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல் உலகின் சிறந்த 50 பல்கலை.யில் இந்திய கல்வி நிறுவனங்கள் புதிய தரவுகள் ரஷியாவிடம் இருந்து 60,000 பீப்பாய் கச்சா எண்ணெய் கொள்முதல்
/

செப். 11 இல் முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

தூத்துக்குடியைப் போல ஓசூரிலும் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image

சென்னையில் முதல்வர் ஸ்டாலின்.

Updated On :9 செப்டம்பர் 2025, 3:43 am

தினமணி செய்திச் சேவை

ஒசூரில் வரும் 11ஆம் தேதி நடைபெற உள்ள தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு. க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

அதை தொடர்ந்து செப். 12 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் பங்கேற்று புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதை ஒட்டி செப். 11ஆம் தேதி காலை 11 மணிக்கு ஒசூர் தனேஜா ஏரோஸ்பேஸ் விமான நிலையத்திற்கு தமிழக முதல்வர் 11 மணிக்கு வருகிறார். அங்கிருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு ஒசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார்.

தொடர்ந்து பிற்பகல் 1 மணி அளவில் ஒசூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அமைய இருக்கும் அசண்ட் சர்க்யூட் நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார். 2 மணிக்கு ஒசூர் சட்டப்பேரவை உறுப்பினரும் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளருமான ஒய். பிரகாஷ் வீட்டுக்கு சென்று ஓய்வு எடுக்கிறார். மாலை 4 மணிக்கு சூளகிரி பேருந்து நிலைய பகுதியில் நடைபெறும் ரோடு ஷோவில் பங்கேற்கிறார். மாலை 6 மணிக்கு குருபரப்பள்ளியில் உள்ள டெல்டா நிறுவனத்தில் புதிய தொழிற்சாலையை தொடங்கி வைக்கிறார்.

பிறகு கிருஷ்ணகிரி டோல்கேட் பகுதியில் நடைபெறும் ரோடு ஷோ வில் பங்கேற்கிறார். இரவு பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் மதியழகன் வீட்டில் தங்குகிறார். மறுநாள் செப்.12ஆம் தேதி காலை 10:30 மணிக்கு கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரியில் நடைபெறும் விழாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் முதல்வர் அவர்களுடன் கலந்துரையாடுகிறார்.

பின்னர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டில் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்து முதல்வர் மு க ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறார். விழா முடிந்ததும் காலை 11:30 மணிக்கு ஒசூர் விமான நிலையம் வந்து அங்கிலருந்து சென்னைக்கு புறப்பட்டு செல்கிறார்.

Summary

CM Stalin has announced that an investors' conference will be held in Hosur, just like in Tuticorin

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.