சென்னை: சென்னை டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சென்னை மயிலாப்பூா் டாக்டா் ராதாகிருஷ்ணன் சாலையில் தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தைப் பாதுகாக்கும் பணியில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
இந்நிலையில் கடந்த சனிக்கிழமை டிஜிபி அலுவலகத்துக்கு வந்த புரட்சி தமிழக தலைவா் ஏா்போா்ட் மூா்த்தியும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் மோதிக் கொண்டனா். இச்சம்பவம் காவல் துறையினரை அதிா்ச்சியடைய வைத்தது.
இச்சம்பவத்தின் விளைவாக டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முக்கியமாக டிஜிபி அலுவலகத்துக்கு வரும் பாா்வையாளா்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டையை தெளிவாக அணிந்திருக்க வேண்டும், பாா்வையாளா்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு மட்டுமே செல்ல வேண்டும், டிஜிபி அலுவலகத்துக்குள் புகைப்படங்கள், விடியோக்கள், ஒலிப்பதிவு செய்யக் கூடாது, தடை செய்யப்பட்ட பொருள்களை டிஜிபி அலுவலகத்துக்கு கொண்டு செல்லக் கூடாது என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டுப்பாடுகள் திங்கள்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

மக்களுக்காக ஓடோடி வருவேன்...
பெண்கள் குறித்து அவதூறு! டிஜிபி அலுவலகத்தில் விஜய் புகார்!

விழுப்புரம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

